Thursday, November 1, 2007

பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

இங்கே பெரும்பான்மையான சாப்டுவேர் இஞ்சினியர்கள் கேட்பது...........

1. அரசாங்க ஊழியர் மாதிரி நாங்க எட்டுமணி நேரமா வேலை பார்க்கிறோம்?

2. அதனால எங்களுக்கு mental stress வருது. வார கடைசியில் enjoy பண்றோம் இதுல என்ன தப்பு?


சரி எதுக்கு 10-12 மணி நேரம் வேலை பார்க்குறீங்க...எட்டு மணி நேரம் மட்டும் வேலை பார்க்கவேண்டியதுதான. ஏன்னா 16 மணி நேரம் அதாவது 2 ஆள் வேலைய உங்கிட்ட கொடுத்து ஒரே நாள்ல முடிச்சுடுன்னு சொன்னா எப்படி முடியும் அதனால 12 மணி நேரம் வேலை பார்க்கிற.யாராவது 8 மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்க முடியாதுன்னு சொல்ல முடியுமா?. மாசம் 20,000 - 50,000 வரை கிடைக்கிறது அப்படின்னுட்டு மாடு மாதிரி உழைக்கிறது. அப்புறம் mental stress வரத்தான் செய்யும். உன்னுடைய உழைப்ப உறிஞ்சுக்கிட்டு அவன் உனக்கு கொடுக்கிற சம்பளம் ஒரு ஆள் சம்பளத்துக்கும் குறைவு.ஆனால் உனக்கு அவன் ஸ்டார் ஹோட்டல்ல வாங்கி கொடுக்கிற பீர்தான் பெருசா தெரியுது. நீங்களெல்லாம் செம்மறியாட்டுக்கூட்டம் மாதிரி.......எவ்வளவு படிச்சாலும் உங்களால கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் ஒரு விவசாய கூலி வேலை பார்க்கிறவன் சொல்லுவான் 8 மணி நேரத்துக்கு மேல வேலை பார்க்க முடியாதுன்னு....ஏன்னா அவனுக்கு பணத்தை விட நிம்மதி தான் முக்கியம். அதனால அவனுக்கு mental stress இல்ல.

வறுமையில் உழன்றவனுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். சம்பாதிக்கிறேன் என்பதற்காக ஆடம்பரமாக செலவு செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. சரி இவ்வளவு சம்பாதித்தும் நிம்மதியாக இருக்கிறாயா அதுவும் இல்லை. ஏன்னா எவ்வளவு வருமானம் வருதோ அதுக்கு மேல உன்னுடைய தேவைகளை அதிகரித்து கொள்கிறாய். ஆனால் அன்றாட கூலி வேலை செய்பவன் அப்படி இல்லை அதனால் தான் அவன் கால் வயிற்று கஞ்சி குடித்தாலும் நிம்மதியா இருக்கான்.

அடுத்து கலாச்சாரம்...

ஆடை - ஆபாசம் - அனைவருக்கும் காட்சிபொருள் (இருபாலரையும் தான்). இல்லைன்னா சில பேர் இவன் ஆணாதிக்கவாதின்னு சொல்லிடுவங்க.

அந்தரங்கம் - அலுவலகத்திலேயே அரங்கேறுகிறது....

மொழி - என் மொழி ஏன் இத்தனை பாடுபடுகிறது. தமிழனிடம் கூட தமிழில் பேச முடியாதா உன்னால். உங்க அப்பன்,ஆத்தா எல்லாம் பிரிட்டன்ல இருந்து வந்தவங்களா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் அழிவில்லாமல் இருந்த மொழி இப்போது வேகமாக சீரழிந்து கொண்டிருக்கிறது.ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், ஒரு மொழி சீர(அ)ழிகிறது என்றால் ஒரு இனமே அழிகிறது என்று அர்த்தம். தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது.


மது - மாது - அமெரிக்க கலாச்சாரம். வடிவேலு சொல்ற மாதிரி "இவன் ஆள அவன் வச்சிருக்கேன்றான், அவன் ஆள இவன் வச்சிருக்கேன்றான்,சே சே ஊராடா இது".

சரி இவையெல்லாம் புறமாற்றங்கள்.....

அகமாற்றங்கள் என்னென்ன.....

முதலில் சாதி.....

ஆரம்பத்தில சாதியே இல்லாமத்தான் இருந்தது. அப்புறம் இரண்டு சாதி ஒன்று ஆண் மற்றொன்று பெண். அடுத்து ஏழை,பணக்காரன், அடுத்தபடியாக ஆரியன் உள்ளே வந்தான் அப்ப வந்தது ஆயிரத்தியெட்டு சாதி. இப்ப புதுசா ரெண்டு சாதி IT சாதி / NON IT சாதி.
IT சாதியில் இருக்கிறவன் IT சாதியிலதான் கல்யாணம் பண்றான்.

இப்பவெல்லாம் மணமகன்(ள்) தேவை விளம்பரத்தில் சாதி, சம்பளம், வயது, உயரம், கல்வி, IT துறையில் பணிபுரியும் மணமகன்(ள்)க்கு இதே துறையிலுள்ள மணமகன்(ள்) தேவை.
சிலபேர் சொல்லலாம் IT field ல இருக்குறவங்க அதே fieldல இருக்குறவங்கள கல்யாணம் பன்ணிகிட்டா இந்த சாதி பிரச்சனை தீறும் என்று. ஆனால் ஒரு விசயம் கவனிக்கப்படவேண்டியது இவன் மனதில் அடுத்த துறையில் (NON IT) குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவன் எல்லாம் தீண்டதகாதவன் என்ற நிலைக்கு பார்ப்பதுதான்.

அடுத்தது பணம்....

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும்... ஆமாம் பிளந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு (அமெரிக்கா, பிரிட்டிஸ் ) நிறுவனத்தில் நீ வேலை செய்கிறாய் அதற்காக உனக்கு பணம் தருகிறது. இவ்வளவுதான் கம்பெனிக்கும் உனக்கும் உண்டான உறவு. ஆனால் உன்னுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அமெரிக்கா, பிரிட்டிஸ் காரனைப்போல் மாற்றமுயல்வது ஏன்? வெளிப்படையான உதாரணம் சொல்வதென்றால் இன்போசிஸ் நாரயணமூர்த்தி தேசியகீதம் பற்றி பேசியது.ஏன் நம் நாட்டு தேசியகீதத்தை கூட பாட மறுக்கிறீர்கள் அதுவும் இந்நாட்டின் முதல் குடிமகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில். அந்த அளவிற்க்கு அந்நிய நாட்டு மோகம் ஏன்?


அதற்காக மென்பொருள்துறையில் இருக்கும் அனைவரையும் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அந்த விகிதம் மிக மிக அதிகம்.


மாற்றத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும்,

கிராமத்தான்...

Wednesday, September 12, 2007

சாதி ஒழிப்போம்......

சாதின்னா என்ன,அது எப்படி வந்தது,அதை பத்தியெல்லாம் பேசவேண்டாம்.இன்னும் சாதி இருக்கு அதை எப்படி ஒழிக்கிறது. ஏன்டா விளக்கெண்ண.....உன்ன ஒருத்தன் அடிமைபடுத்துறான்னு உனக்கு எங்கோ சுடுதுல்ல. அப்புறம் நீ என்ன மயிருக்குடா இன்னொருத்தன அடிமைபடுத்த நினைக்கிற.செட்டியாருக்கு தேவர் அடிமை, தேவருக்கு பள்ளன் அடிமை, பள்ளனுக்கு பறையன் அடிமை, பறையனுக்கு சக்கிலியன் அடிமை, சக்கிலியனுக்கு வண்ணான் அடிமை.வண்ணானுக்கு இன்னொருத்தன்...நாம எல்லோருக்கும் வாயில வைக்க ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நாம எல்லோரும் அடிமை. ஊருல ஒரு நல்ல காரியம்னா, கோவில் திருவிழான்னா அவன கூட்டிகிட்டு வர்ற. அவனுக்கு உன்னோட சாமிக்கு மேல மரியாதை கொடுக்குற. அவன் என்ன சொன்னாலும் சாமி சொன்னா சரிதான் அப்படின்னு கோவில் மாடு மாதிரி தலைய ஆட்டிகிட்டு இருக்க. அவன் என்ன பண்றான், மணிய ஆட்டிட்டு இருக்குறது எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிறான்.அவனுக்கு நீ உழைச்சு சம்பாதிச்சு வாங்கிவச்ச பொருள் தீட்டு இல்ல,ஆனா நீ தீட்டு. என்னைக்காவது உன்ன அவன் வீட்டுக்குள்ள நுழைய விட்டுருக்கானா. நீ ஒரு நாளைக்கு அவன உன் வீட்டுக்கு வெளிய நிறுத்து பார்ப்போம். உனக்குத்தான் சொரணை எருமைய விட அதிகம் ஆச்சே.ஆமா உனக்கு கீழே இருக்கிறவன்னு சொல்லிக்கிட்டு நீ இன்னொருத்தன வீட்டுக்குள்ள ஏன் தெருவுக்குள்ள கூட விடமாட்டேங்கிற.அப்புறம் அவன் எப்படி உன்ன உள்ள விடுவான். அவங்களுக்குள்ள என்னைக்காவது சண்டை சச்சரவு வந்துருக்கா. உனக்கு அவன் வச்சா மட்டும் இனிக்குது. ஊர்ல கூட படிக்கிற நண்பன் ஒருத்தன், அவன நான் வாடா, போடான்னுதான் கூப்பிடுவேன். அந்த பையன எங்கப்பா வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவார்(டனும்). ஏன்னா அவன் மேல் சாதி. அதே மாதிரி இன்னொருத்தன், அவனோட அப்பா என்னை வாங்க, போங்கன்னு தான் கூப்பிடுவார். நான் அவரை வா,போன்னு மரியாதை இல்லாம கூப்பிடலாம். ஏன்னா அவர் கீழ்சாதி.உன் அப்பாவ உன் கூட படிக்கிற ஒருத்தன் வா,போன்னு மரியாதை இல்லாம கூப்பிடும்போது உனக்கு சுடுதில்ல, அதேமாதிரி நீ இன்னொருவரை கூப்பிடும் போது அவரோட மகனுக்கும் சுடுமில்ல. அப்புறம் என்ன மயிருக்குடா அப்படி பண்றீங்க. நீ ஒருத்தனை அடிமையாக்க நினைச்சேன்னா உன்னையும் ஒருத்தன் அடிமைபடுத்துவான்.முதல்ல மனுசன மதிக்க கத்துக்க, கத்துக்கொடு.

அன்புடன்

கிராமத்தான்....

Saturday, September 1, 2007

இது என் உடன்பிறந்த சகோதரனின் கிறுக்கல்.....

தொடர்ந்து பயணிக்கிறேன்
உந்தன் வளைவு நெளிவுகளில்

இமைக்காமல் இரசிக்கிறேன்
பச்சை போர்வைக்குள்ளான
உந்தன் மேடு பள்ளங்களை

கண்களால் களவாடுகிறேன்
படச்சுருளால் முடியாத
உந்தன் அழகை

நீயோ
வெட்கப்பட்டு மறைத்துக்கொள்கிறாய்
வெண்சரிகை கொண்டு

உன்னில் என்னை தொலைக்கிறேன்
என்னில் உன்னை தேடுகிறேன்

*************************************************************


தவம்....................


நீ நடந்துசென்ற

தெரு வீதியில்

உந்தன் பாதசுவடுகளால்

எழுதிச்சென்ற

எனக்கான

உந்தன் வார்த்தைகளை பொறுக்க.....

*************************************************************


தாய்பாலை உண்டு பெருகிய

இரத்தத்தை......

தெரு வீதியில்

தாய் மண்ணில்

சிந்திய நாளை நினைத்து...........

கர்வப்பட்டு

கர்வமின்றி முத்தமிடுகிறேன்........

அப்போது விழுந்த

கண்ணீர் துளி கண்டு

வெட்கப்பட்டு

தானும் அழுகிறது

மேகம் மழையாய்

மனவீதியில்......... நினைவலைகள்

சொட்டிக்கொன்டுதான் இருக்கின்றன மழை விட்டும்

இலை சொட்டும் நீராய்.........

Wednesday, May 23, 2007

டெல்லி சென்ற அனுபவம்......

இது எனது முதல் பதிவு



சிலநாட்களுக்கு முன்பு கான்பூரில் இருந்து நண்பனை சந்திக்கும் முகமாகவும் எனது சொந்த விசயமாகவும் டெல்லி சென்றிருந்தேன்.போகும்போதே ஒரே ஏழரைதான்..... பத்து மணிக்கு வரவேண்டிய இரயில் மூணு மணி நேரம் தாமதம். காலை ஒன்பது மணிக்கு போய் சேர்ந்தேன்.என் நண்பனுக்கு தான் அதிக சிரமம்.காலை அஞ்சு மணிக்கே வந்து இரயில் நிலையத்தில் காத்துகிட்டு இருந்தான்.அப்புறம் ரெண்டுபேரும் மெட்ரோ இரயில் புடிச்சு கரோல்பாக் வந்தோம்.கான்பூர்ல ரொட்டியும் பருப்பும் சாப்புட்டு சாப்புட்டு நாக்கெல்லாம் செத்துபோயிருச்சு.நல்ல தமிழ் ஹோட்டல் போய் காலை சாப்பாடு முடிச்சோம். நான் டெல்லி வந்த நோக்கங்களில் இதுவும் ஒண்ணு.அப்புறம் அங்கிருந்து பஸ் பிடிச்சு குர்ஹாவன் போனோம்.ரூம்ல போய் நல்ல தூக்கம் ஒண்ணு போட்டுட்டு சாயங்காலம் நாலுமணிக்கு எழுந்து வெளியே போனோம்.அங்கு நான் கண்ட காட்சிகளின் சிறுதொகுப்பு இது. இந்த சமூகம் கலாச்சாரம் என்ற பெயரால் எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது, மேலை நாட்டு மோகத்தில் எப்படி மக்கள் வீழ்ந்துகிடக்கிறார்கள் என்பதற்கு ஓர் அடையாளம். குர்ஹாவனில் நெறைய ஷாப்பிங் மால்கள் உள்ளன.அங்கு வரும் மக்களில் பெரும்பாலோர் கலாச்சாரம் என்ற பெயரால் அணிந்துவரும் ஆடைகள் இருக்கிறதே அப்பப்பா.......... ஏண்டி போட்டுருக்கிறதே தொப்புள் தெரியுற மாதிரி அப்புறம் என்ன அதவேற இழுத்து இழுத்து மறைக்க try பண்ற. பெண்கள் தங்களது மேல் ஆடையில் இப்படி எழுதியிருக்கிறார்கள் "yes,its all about me", "Mangoes", "Look but don't touch", "fcuk" etc......ஆண்கள் என்ன மட்டும் விதிவிலக்கா...."why are you looking like this,i'm not your dad".எவனையாவது அவனோட தாய்மொழில பேசுறத பார்க்குறது ரெம்ப அபூர்வம். அங்கெ ஆங்கிலம் மட்டுமே பிரதான மொழி.அதிலும் தமிழன் பேசுற பேச்சு என்னமொ இவன் அப்பன் ஆத்தா எல்லாம் பூர்வீகம் பிரிட்டன்னு நெனப்பு.சிறுகுழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அரைகுறை ஆடையுடன் செய்யும் அட்டகாசம்.....அந்த வகையில் தமிழன் ஏதோ ஓரளவுக்கு பரவாயில்லை.அங்கெல்லாம் பொண்ணுங்க தண்ணி அடிக்கிறது ரெம்ப சாதரணம். மறுநாள் டெல்லி இந்தியா கேட் போனோம்.அங்கதான் கிளைமாக்ஸ்.... கருமம் கருமம்.... பட்டபகல்ல வெட்டவெளியில லவ்வர்ஸ்ன்ற பேர்ல அவங்க அடிக்கிற கூத்து இருக்கே கொஞ்சம்கூட வெட்கமில்லாம இவன் மடியில அவ படுக்கிறதும் அவ மடியில இவன் படுக்கிறதும் முத்தம் கொடுக்கிறதும் சில்மிஷம் பண்றதும்.......ஊராடா அது..............